யாருமில்லா தனியரங்கில் -10
அத்தியாயம் -10 சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவர் அருகில் வளர்ந்திருந்த ஒரு அடர்ந்த மரத்தினடியில் கிடந்த இருக்கையில் வந்தமர்ந்தான் அபிமன்யு. அவன் எண்ணங்கள் பயணித்த திசைகளில் ஆர அமர வேடிக்கை பார்த்திட தனிமை தேடியலைந்தது அவனுள்ளம். மனைவி என்ற பதமே மந்திரப்பந்தாய் மொழியொருத்தியையே சுற்றி வந்தது. நிலாவும் அருணும் பேசிய கணத்திலேயே அவன் எண்ணச் சிதறல்கள் மொழியை மையப்படுத்தி கற்பனைங்களுக்கு வண்ணம் தீட்டி பேசிய வார்த்தைகளை சித்திரங்களாக்கி ரசித்து விட்டிருந்தது க்ஷண பொழுதுக்குள். 'அவள் வினோத்தின் மென்மொழி' என்ற வார்த்தைகள் காற்றில் ரீங்காரமிட்டுச் செல்ல விரக்தியின் முத்தாய்ப்பாய் அவன் வார்த்தைகளை விட்டுவிட்டு வந்துவிட்டான் அவர்களிடமிருந்து. இரு கைகளாலும் முகம் மூடி அமர்ந்திருந்தவன் அருகில் வந்தமர்ந்தாள் மொழி. அவளின் அருகாமை சிணுங்கல்கள் அவனுக்கு எப்பொழுதுமே அக்கினி பிரவேசம் தான்.உள்ளத்தின் தளர்வுகள் உடலிலும் வந்து விடுமோ என அஞ்சியே இறுக்கிக் கொண்டான் இதயத்தை. அவன் இதயத்தை நொறுக்கிச் செல்லும் சோதனையாய் அவன் தோள் மீது ஆதரவாய் கரம் பதித்தாள் மொழி. "இதென்ன அபி இவ்வளவு சின்ன வ...