இடுகைகள்

யாருமில்லா -5 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -5

 அத்தியாயம் -5 கண்ணாடியில் தெரிந்த வினோத்தின் அருவத்தைக் கண்டு திடுக்கிட்டான் அபிமன்யு. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. மெல்ல திரும்பி பார்க்க அவ்விடம் வெறுமையாக இருந்தது.சுவரின் அருகில் சென்றான். கைகளால் காற்றில் தடவினான். எதையாவது உணர முடிகிறதா என்று கூர்ந்து கவனித்தான். அப்படி எதுவுமில்லை என்று தோன்றவும் பிரம்மை என்று நினைத்துக் கொண்டு கொஞ்சமாய் ஆசுவாசமானான்.லேசாய் தலை வலிப்பது போல் இருந்தது. சிறிது தூங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன் உடை மாற்றிக் கொண்டு படுத்து விட்டான். சிறிது நேரத்திலேயே தூங்கியும் போனான். அவன் படுத்திருந்த மெத்தையின் மறுபக்கத்தில் இருந்த போர்வையில் சிறிதாய் வண்ண ஓவியமோன்று தோன்ற ஆரம்பித்தது. அது வினோத்தின் உருவத்தை கொண்டிருந்தது. சட்டென மேல் எழுந்த வினோத்தின் உருவம் அபியின் மேல் படர ஆரம்பித்தது. அந்த அறை முழுவதும் மகிழம்பூவின் மனம் நிறைந்திருந்தது. அப்போது கதவைத் திறந்து கொண்டு வந்தாள் நிலா. அபி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்த நிலா குளியலறைக்குச் சென்று வாளியில் நீரை எடுத்து வந்தவள் அப்பிடியே அதை அவன் மீது கவிழ்த்து விட்டாள். ஈரத்தில் நன...