யாருமில்லா தனியரங்கில் -4
அத்தியாயம் 4 மின்னும் ஒளிச்சுடர்களின் ராஜாங்கம், ஜொலித்திடும் வெளிச்சப் பூவாய் இரவு நேர நியூயார்க் நகரம் மின் தாரகையாய் மின்னிட, அந்த வெளிச்சத்தை பிரதிபலித்தவனின் கண்களில் மருந்துக்கும் மலர்ச்சியில்லை. மன மகிழ்ச்சியின் பிரதி பிம்பம் அவன் கண்களில் தென்படவில்லை. மாறாக தூரத்து இருளில் தொலைந்த போன அவன் மனதையும் தொலைய செய்த அவளையும் தேடி பிடித்திடும் நோக்கமின்றியொரு அசுர பயத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது அபிமன்யுவின் மனம். இரண்டு வருடங்களுக்கு முன்னான அந்த நிகழ்வு அவன் மனதை மட்டுமல்ல, அவனையே உலுக்கியெடுத்து போயிருந்தது.இறுக கண்களை மூடிக் கொண்டிருந்தவனில் மின்னி மறைந்தது அந்த காட்சி. அவன் வழியாய் மென்மொழியை நெருங்கியிருந்த வினோத்தின் செயல். ஒரு செயல் கொல்லும் வலியை குடுக்க முடியுமென அவன் அப்போது தான் உணர்ந்தான். அந்தக் உயிர் கொய்யும் வேதனையினூடே அவன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தான் காதல். மென்மொழியின் மீது அவன் கொண்ட அபரிமிதமான நேசம்.. தன்னுயிர் காதலியை ஒருத்தன் பார்த்தாலே பத்தியெரியும்.. அப்படியிருக்கும் போது அவனது உடலை கருவியாக உபயோகித்த வினோத்தால் துவண்டு போனான் அபிமன்யு. வினோத் மென்மொழ...