யாருமில்லா தனியரங்கில் -6
அத்தியாயம் 6 நிலா கேட்ட கேள்வியில் முதலில் திகைத்தாலும் விரைவில் தன்னை சுதாரித்துக் கொண்ட அபிமன்யு, “உன் கூட இருக்க வரைக்கும் அப்பிடி எந்த ஒரு நல்ல விஷயமும் எனக்கு நடக்காது நிலா “என்று சொல்ல,அவள் கடுப்பாகி “இல்லைனா மட்டும் சார் அப்பிடியே நாலு ஃபிகர லவ் பண்ணி நாப்பது நாள் டேட்டிங் போயிருப்ப.”என்க “ஒத்த ஃபிகருக்கு வக்கத்து கிடக்குறேன். இதுல நாலு ஃபிகாரம்.நாப்பது டேட்டிங்காம். நடக்குற கதையா இது. நானே பேசாம கைலாசா போயிரலாம்னு நினைச்சுட்டு இருக்கேன் “ “மொத அத செய் “என்றிருந்தாள். ‘இவள என்ன சொல்லி அனுப்பினா, என்ன பண்ணிட்டு இருக்கா… சிங்காரி’என பல்லைக் கடித்தான் அன்புச் செழியன். பின் கடுப்புடன் உள்ளே சென்றான். “டேய் அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்துட்டு தூங்காம என்ன வெட்டி அரட்ட அடிச்சிட்டு இருக்க “என்று அபியை கடிந்து விட்டு, “நீ கிளம்பலையா இன்னும் “என்று நிலாவிடம் எகிற, “நீங்க தான மாமா..”என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவள் தலையில் கொட்டி, “எந்திரிச்சி போடி “என்று அவளை விரட்டினான். ‘இவரே பேச சொல்லிட்டு இப்ப வந்து விரட்டுறத பாரு பிஎம்’ வலித்த தலையை தேய்த்துக் கொண்டே அன்புவை முறைத்து விட...