இடுகைகள்

யாருமில்லா -11 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -11

படம்
அத்தியாயம் -11 மழையும் இருட்டுமாய் அந்நேரம் வாகனங்களின் இரைச்சல் ஒலியிலும் முகப்பு விளக்கின் வெளிச்சத்திலும் நிறைந்திருந்தது நொய்யல் சாலை. அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வரும் டிராக்டர்களின் வரத்து அதிகமிருப்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும்.மழை வேறு இடைவிடாமல் பொழிந்து கொண்டிருக்க வாகனத்தை ஓட்டவே சிரமப் பட்டனர். ஆனால் அதில் விதி விலக்காய் நெஞ்சத்தில் துள்ளும் உற்சாகத்தின் விளிம்பில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் வினோத். அவன் பின்னால் அமர்ந்து கொண்டு வந்த அபிமன்யு தான் புலம்பிக் கொண்டே வந்தான். “ஏன் அண்ணாத்த மழை தான் இப்படி ஊத்துதே, கொஞ்ச நேரம் நின்னுட்டு மழை நின்ன பிறகு போனா தான் என்ன?” முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே கேட்டான் அபிமன்யு. “மொழி தனியா இருப்பா டா.” “அதுக்கு தான் சொன்னேன் மெய்மாவ ரேவதி அத்தை வீட்ல விட்டுட்டு வரலாம்னு “ “ப்ச் சீக்கிரம் வந்துரலாம்னு நினச்சேன். அந்தாளு லிஸ்ட் கொடுக்கறேன் மெனு கொடுக்கறேன்னு இழுத்தடிச்சுட்டான்”வந்த கடுப்பிற்கு வாடிக்கையாளரை தாளித்தான். “சரி சரி பொலம்பாத. அந்த ஹெல்மெட்டயாச்சும் போட்டுட்டு ஓட...