இடுகைகள்

யாருமில்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -16

படம்
யாருமில்லா -16 நிவனின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நிலா சடாரென கதவு திறக்கும் வேகத்தில் எழுந்து அமர்ந்தாள். அப்போது உள்ளே வேகமாய் வந்த மொழி நிலாவைப் பார்த்ததும் சற்று தடுமாறிய பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அதற்கும் மேல் தாங்க முடியாதவளாய் உடைந்து அழ வெளியிலிருந்து அவளின் அழுகை சத்தத்தை கேட்ட நிலா அவளை தேற்றும் வழியன்றி தவித்தாள். மீண்டும் மீண்டும் இவளையே ஏன் உடைக்கிறாய் என கடவுளின் மீதே கோவம் வந்தது. அவளின் அழுகைக்கு காரணமான அபியின் மீது ஆத்திரம் மிகுந்தது. ஒன்றும் ஒன்றும் இரண்டென கணக்கிட அவளுக்கு நொடி நேரம் தான் பிடித்தது. 'இவனுக்கு என்ன தைரியமிருந்தால் மொழியை அழ வைத்திருப்பான் ' என அபியின் மீது கோவம் கொண்டு தான் இப்படி வந்து அறைந்ததே. ஆனால் பதிலுக்கு தன் காலை அணைத்துக் கொண்டு கதறிய பொழுது முற்றிலும் திகைத்துத் தான் போனாள். 'ஐயோ இவனின் உடல்நிலைக்கு இந்த அழுகை நல்லதில்லையே 'பதறியது அவள் மனம். அபியை மெல்ல பிரித்து விட்டு அவனைப் போலவே மண்டியிட்டு அமர்ந்தாள். அபியோ முகத்தை மூடி விசும்பிக் கொண்டிருந்தான். இவள் அமர்ந்ததும் மடியில் முகத்தை புதைத்துக் கொண...

யாருமில்லா தனியரங்கில் -15

படம்
யாருமில்லா -15 அபிமன்யு மருத்துவமனையிலிருந்த அதே நேரம் நிவனை தூங்க வைத்தவாறே அவனின் அருகில் படுத்திருந்தாள் மென்மொழி. உள்ளத்தின் வருத்தங்களை உதடுகள் வெளிப்படுத்தி விடா வண்ணம் இறுகி இணைந்து கிடந்தது அவளிதழ்கள். தனிமையான உள்ளத்து அரங்கில் சமீப காலமாய் உணர்ந்து கொண்டிருந்த ஒருவனது நேசக் குரல் இன்று அதி கனமாய் கானம் இசைத்து துடிக்க வைத்தது. 'மனு…' பெரும் கேவலொன்று அவளிடமிருந்து வெளிப்படத் துடிக்க, நிவனின் இருபுறமும் தலையணையை வைத்து விட்டு அறையோடு இணைந்திருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். ஷவரை முழுதாய் திறந்து விட்டவள் அப்படியே அமர்ந்து விட்டாள் அதனடியில். இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ள விரல் இடுக்குகளில் வழிந்தது கண்ணீர். "நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மனு" தேம்பல்களின் இடையினில் விளம்பரமாய் இடைவிடாது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளை தொப்பலாய் நனைத்துச் சென்றிருந்த நீரினைப் போலவே நேரமும் தீர்ந்து கொண்டிருந்தது கணக்குவழக்கின்றி. அழுகையும் தேம்பலும் மெல்ல குறைந்து முற்றிலுமாய் நின்றிருக்க இமை மூடி அமர்ந்திருந்த மொழியின் மனதில் மனு மட்டுமே மிச்சமிருந்...

யாருமில்லா தனியரங்கில் -14

படம்
யாருமில்லா -14 "நம்ம மொழிக்கு ஒரு வரன் வந்திருக்கு ரேவதி"என்றார் பொன்னாத்தாள். "நல்ல இடமா பெரியம்மா " "அதெல்லாம் அருமையான இடம் தான். எங்க சின்னாத்தா சொந்தம். பையன நான் பாத்துருக்கேன். ரொம்ப தங்கமான குணம். அவன் மொத பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பையனை விரும்பியிருக்கு. அவிங்க அப்பா அம்மா கட்டாய படுத்தி அந்த புள்ளைய கண்ணாலம் பண்ணி வச்சுருக்காங்க. தாலி கட்டி மறுநாளே அந்த புள்ள இவன் கிட்ட உண்மைய சொல்லிடுச்சு. இவன் அந்த புள்ள விரும்புன பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டான். இப்ப ஒரு ஆறு மாசம் மின்னாடி முறப்படி விவாகரத்தும் வாங்கிட்டான்." "இப்படியுங்கூடவா இருக்காங்க?" ஆச்சிரியப்பட்டார் ரேவதி. "அந்த பையன் குணம் அப்பிடி ரேவதி. ஆனா இதுல கெட்ட விஷயம் என்னன்னா அந்த பையன் ரெண்டாந்தாராம்னு இப்ப ஒருத்தரும் பொண்ணு தர மாட்டிங்குறாங்க." என்று தாமரை சொல்ல, "அட கடவுளே " என வருத்தப் பட்டார் ரேவதி. "போன வாரம் ஒரு விசேஷத்துல அவங்க அப்பா அம்மாவை பார்த்தேன் ரேவதி. அவங்க நிலைமைய சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. நம்ம பக்கம் பொண்...

யாருமில்லா தனியரங்கில் -13

படம்
அத்தியாயம் -13 சுடும் வெய்யிலின் தீரத்தில் நெற்றியில் பொடித்த வியர்வை துளிகளை துப்பட்டாவில் துடைத்தபடி ஏற்கனவே எண்ணி வைக்கப் பட்டிருந்த முட்டைகளை தன் திருப்திக்காக ஒரு முறை எண்ணிக் கொண்டிருந்த மொழி அந்நேரத்தில் வாசலில் கேட்ட கார் சத்தத்தை கேட்டுவிட்டு, 'வேலு முட்டை எடுத்துட்டு போக வந்துட்டான் போல 'என நினைத்தவள் வேகமாய் முட்டைகளை கணக்கிட்டு முடிக்க, "முட்டையெல்லாம் எடுத்து வச்சாச்சா ராணிக்கா "என்று பண்ணையில் வேலை செய்யும் ராணி என்ற பெண்மணியிடம் அபி பேசும் குரல் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். ராணியிடம் பேசியவாறே உள்ளே வந்து கொண்டிருந்தவன் பார்வையில் தன்னை எட்டிப் பார்த்த மொழி படவும் நடந்து கொண்டிருந்தவன் கால்கள் தன்னால் நின்றது. 'ஆகா! யாரு கண்ணுல படவே கூடாதுன்னு நினைச்சேனோ அங்கேயே வந்து கோர்த்து விட்டுருக்கியே முருகா 'என்று எண்ணியவாறு, கண்ணாமூச்சி ஆட்டத்தின் நிறைவில் அகப்பட்ட சிறுவன் நிலையில் கைகளை பிசைந்தவன்,மொழி தன்னை நோக்கி வருவது கண்டு  "அக்கா இருங்க ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன் " என்றவாறு கார் நிறுத்துமிடம் நோக்கி ஓடினான். அவன் திடுமெ...