இடுகைகள்

யாருமில்லா -9 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -9

படம்
அத்தியாயம் -9 முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… பாடல் காரில் இசைத்துக் கொண்டிருக்க அதனோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தனர் அருணும் நிலாவும். பாடல் வரிகள் என்னவோ அவனுக்கென்றே எழுதி வைத்தது போலிருந்தது அபிமன்யுவிற்கு. அவனும் மெல்ல இதழ்களுக்குள் வார்த்தைகளை ரசித்து முனுமுனுத்துக் கொண்டிருந்தான். அருண் அபி பக்கத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க பின்னால் நிலாவின் மடியில் ஆரலி அமர்ந்திருக்க மொழியின் மடியில் கவின் அமர்ந்திருந்தான். முன்புறக் கண்ணாடியில் தெரிந்த மொழியின் முகத்தை அவ்வப்போது பார்த்தவாறே இதழைசைத்துக் கொண்டிருந்தான். தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… பிழை எல்லாமே கலைவேன்… பின்பாதி வரிகளை மொழியை பார்த்தவாறே சற்று சத்தமாக பாட, அதுவரை வெளியே வேடிக்கை பார்த்துக...