இடுகைகள்

யாருமில்லா -7 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -7

அத்தியாயம் -7 அபிமன்யு வந்த மறுநாள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை. உலக நண்பர்கள் தினம். காலையில் எழுந்த அபிமன்யு வெகு ஆவலாய் வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்க முகம் பியூஸ் போன பல்பானது.அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஞாபகம் வந்து போனது. வெண்ணிலா வீதியுலா நடத்தும் இரவின் நிறைவிற்கு பின் வெண்கதிரோன் வீர உலா நிகழும் பகல் பிறந்து இரண்டு மணி நேரம் கடந்த நிலையிலும் படுக்கையை விட்டு நகராமல் சோம்பலாய் கைபேசியை நோட்ட மிட்டுக் கொண்டிருந்த அபிமன்யு சட்டென எழுந்து அமர்ந்தான். அதுவரை அமைதியாய் இருந்த அவனது கைபேசி அவன் சத்தத்தை கூட்டி வைத்ததில் அலறிக்கொண்டு பாடியது. ‘நட்புதான் சொத்து நமக்கு.......... நட்பு தான் சொத்து நமக்கு...........’ என் நண்பன் போட்ட சோறு.... நிதமும் தின்னேன் பாரு.....’ நட்பின் வலிமையை முழங்கும் விதமாய் பாடல் வரிகளும் அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களுமாய் வாட்சப் ஸ்டேட்டஸில் ஓடிக்கொண்டிருந்து. “அச்சோ மச்சி பிச்சுட்டாளே!” என்று வாய் விட்டே சொன்னவன் உடனடி செயலாய் அவள் எண்ணிற்கு அழைத்தான்.சில நிமிட காத்திருப்பிற்கு பின் அழைப்பு ஏற்கப்பட எதிற்முனையின் ...