யாருமில்லா தனியரங்கில் -12
அத்தியாயம் -12 சுழலும் மந்திரக் கொம்பொன்று நம்மை சுழற்றி வைக்கும் நிலையொன்றில் என்ன செய்ய முடியும்? மந்திரத்தில் மயங்கிக் கிடைப்பதைத் தவிர. காதலும் அப்படித்தான். அது ஒரு மந்திரக் கோல். நம்மை நோக்கி அது நீளும் போது காற்றுக்கு அசையும் இறகு போல நம் மனம் வெகு இம்சையாய் அதன் போக்கில் ஆட ஆரம்பித்து விடும். அதை கட்டி வைத்தால் பிய்ந்து போவது நம் மனம் தானே தவிர காதலல்ல. பருத்திப் பூவின் மென் இதயம் நேச நீரில் மூழ்கி ஊறி கிடக்கிறது. அதை காய வைக்க இடைவெளி என்னும் வெயிலில் உலர்த்த சறுகானது என்னவோ ஆணவன் இதயமே. அன்றைய இரவின் மீதியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் எதிர் வினைகளை அஞ்சி அபிமன்யூ அவர்களின் உணவகமான 'அயினி நற்சுவை'யில் தனது வேலையை பிஸியாக்கிக் கொண்டதில் மொழியின் கண்ணிலேயே படாமல் போனான். மென்மொழியோ அன்றைய நிகழ்வை கனவோ நனவோ என்ற குழப்பத்தில் அபியிடம் பேசக் காத்திருந்தாள். கற்பனையோ நிஜமோ அதை அவள் மனம் எந்த வித எதிர்ப்புமின்றி அவனில் இசைந்து போனதை நினைத்து பெண்ணவளுக்கு ஒரு வித படபடப்பும் நடுக்கமுமாய் உள்ளூற உராய்ந்து கொண்டிருந்தது நேசத்தின் தடுமாறல். நான் அவனைக் காதலிக்கின்றேனா? மென...