இடுகைகள்

யாருமில்லா -3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -3

 அத்தியாயம் 3 வெயில் மண்டையை பிளந்தது அபிமன்யுவிற்கு. தங்கள் உணவகத்தின் பின் பகுதியில் அந்த வாரத்திற்கான மளிகை சாமான்கள் இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. “தம்பி கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வரியா.. உங்க அப்பத்தா வெத்தல தீந்திருச்சுன்னு காலைலயே சொல்லி விட்டுச்சு.. மதியம் சாப்பிட போகும்போது கொடுக்கலாம்னு வச்சிருந்தேன். அதுக்குள்ள வேற வேல வந்துருச்சு. ஒரு எட்டு போய் குடுத்துட்டு வந்துடுயா.. இல்லைனா ராத்திரிக்கு ஒரு மூச்சு பாடி தீத்திரும்..” “வரவர பொண்ணாத்தாக்கு ஓவர் வாய் ஆகிப் போச்சுப்பா.. இதுக்கொசரம் நான் வெய்யில்ல அலையனுமா..” “வயசானவங்க தம்பி.. ஏதோ முடியாத வேலைக்கு நம்ம கிட்ட கேக்குது.. நீ நம்ம கார்லயே போய்ட்டு வந்துடுயா “என்று ராகவன் சொல்லவும், “சரி சரி குடுங்கப்பா.. நான் போய்ட்டு வரேன் “என்றவன் அவரிடம் வெத்தலையை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். “இந்தா தாமர தம்பிக்கு ஒரு போனு போட்டு கேளு.. மத்தியானம் வீட்டுக்கு வரேன்னு சொன்னவன இன்னும் காணோம்..இந்த வெத்தலைய போடாம வாயெல்லாம் சவசவன்னு கிடக்கு.. ஊரே சுத்தரானுவ, இந்த கிழவிக்கு கொண்டாந்து குடுக்க மட்டும் நேரம்...