யாருமில்லா தனியரங்கில் -16
யாருமில்லா -16 நிவனின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நிலா சடாரென கதவு திறக்கும் வேகத்தில் எழுந்து அமர்ந்தாள். அப்போது உள்ளே வேகமாய் வந்த மொழி நிலாவைப் பார்த்ததும் சற்று தடுமாறிய பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அதற்கும் மேல் தாங்க முடியாதவளாய் உடைந்து அழ வெளியிலிருந்து அவளின் அழுகை சத்தத்தை கேட்ட நிலா அவளை தேற்றும் வழியன்றி தவித்தாள். மீண்டும் மீண்டும் இவளையே ஏன் உடைக்கிறாய் என கடவுளின் மீதே கோவம் வந்தது. அவளின் அழுகைக்கு காரணமான அபியின் மீது ஆத்திரம் மிகுந்தது. ஒன்றும் ஒன்றும் இரண்டென கணக்கிட அவளுக்கு நொடி நேரம் தான் பிடித்தது. 'இவனுக்கு என்ன தைரியமிருந்தால் மொழியை அழ வைத்திருப்பான் ' என அபியின் மீது கோவம் கொண்டு தான் இப்படி வந்து அறைந்ததே. ஆனால் பதிலுக்கு தன் காலை அணைத்துக் கொண்டு கதறிய பொழுது முற்றிலும் திகைத்துத் தான் போனாள். 'ஐயோ இவனின் உடல்நிலைக்கு இந்த அழுகை நல்லதில்லையே 'பதறியது அவள் மனம். அபியை மெல்ல பிரித்து விட்டு அவனைப் போலவே மண்டியிட்டு அமர்ந்தாள். அபியோ முகத்தை மூடி விசும்பிக் கொண்டிருந்தான். இவள் அமர்ந்ததும் மடியில் முகத்தை புதைத்துக் கொண...